எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 15 அக்டோபர், 2009

அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய

அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி திட்டவட்டம்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 02:49.40 AM GMT +05:30 ]
வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அங்கு புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு முன்னர், அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்ற முடியாது. இவ்வாறு நேற்று தம்மைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவிடம் மிகத் திட்டவட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் அகதிகளாகி , வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் சொந்தப் பகுதிகளில் இப்போதைக்கு மீளக்குடியேற்ற முடியாது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 03:53.28 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை மீள நடத்தவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பகுதியில் இருந்து சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாத நிலையில், இந்த பாதை திறப்பு பயனற்றது என யாழ்ப்பாண நலன் ஒழுங்கமைப்புகள் தெரிவித்துள்ளன.
அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தல்களை இலக்கு வைத்து, காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலையை மீள திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் யாழ்ப்பாண குடாநாட்டின் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டுள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்

இலங்கை விஜயம் தொடர்பில் பாலு, கனிமொழி திருமாவளவன் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2009, 11:34.33 AM GMT +05:30 ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை.
தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை. தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் நோ கொமன்ட்ஸ் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில், முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

வவுனியா

வவுனியா வதைமுகாமின் சில வீடியோ காட்சி பதிவுகள்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 11:06.38 AM GMT +05:30 ]
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வதைமுகாமில் தங்கியிருக்கும் மக்களை ஜப்பானியர் சிலர் சந்தித்தனர்.