எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 15 அக்டோபர், 2009

அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய

அகதிகளின் மீள்குடியேற்றம் கண்ணிவெடி அகற்றிய பின்னரே: இந்திய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி திட்டவட்டம்
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 02:49.40 AM GMT +05:30 ]
வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அங்கு புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு முன்னர், அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்ற முடியாது. இவ்வாறு நேற்று தம்மைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவிடம் மிகத் திட்டவட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் அகதிகளாகி , வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் சொந்தப் பகுதிகளில் இப்போதைக்கு மீளக்குடியேற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக