யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2009, 03:53.28 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை மீள நடத்தவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பகுதியில் இருந்து சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாத நிலையில், இந்த பாதை திறப்பு பயனற்றது என யாழ்ப்பாண நலன் ஒழுங்கமைப்புகள் தெரிவித்துள்ளன.
அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தல்களை இலக்கு வைத்து, காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலையை மீள திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் யாழ்ப்பாண குடாநாட்டின் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டுள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக