
[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 10:10.16 AM GMT +05:30 ]
ஈழத்தமிழர்களை காக்கக்கோரி தன்னுயிர் ஈந்த தியாகி முத்துக்குமரனுக்கு வீரவணக்க நாள் கடைப்பிடிக்க பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈழத்தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த முத்துக்குமாரின் முதலாண்டு நினைவு நாள் வருகிற 29-ம் தேதி வரவிருக்கிறது. முத்துக்குமாரின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 14பேரும் வெளிநாடுகளில் மூன்று பேரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்து அந்நாளில் தமிழகமெங்கும் வீரவணக்க நாள் கடை பிடிக்கும்படி உணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் ஜனவரி 29-ம் நாள் அன்று முத்துக் குமார் மற்றும் தோழர்களின் நினைவு நாளை கடைப்பிடிக்கும் வகையில் ஊர்வலங்கள் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன். சென்னையில் முத்துக்குமார் வாழ்ந்த கொளத்தூரில் 29ஆம் தேதி மாலை நடைபெறவிருக்கும் வீர வணக்க நாள் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசு, வைகோ, தா.பாண்டியன் மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக