எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

தளபதி பொட்டு அம்மானும் உயிருடன் இருக்கிறார்: திருமாவளவன் தெரிவிப்பு

[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 10:22.35 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகளின் 2-ம் கட்ட தலைவரும், உளவுப்படை தளபதியுமான பொட்டுஅம்மான் கதி என்ன ஆனது? என்பதும் மர்மமாகவே இருக்கிறது. அவரும் உயிரோடுதான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார்.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு விடையளிக்கும் வகையில் விடுதலைப்புலிகளின் இணையதளம் ஒன்று அவர் உயிரோடு இருக்கிறார், விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்று செய்தி வெளியிட்டு உள்ளது. விடுதலைப்புலிகளின் 2-ம் கட்ட தலைவரும், உளவுப்படை தளபதியுமான பொட்டுஅம்மான் கதி என்ன ஆனது? என்பதும் மர்மமாகவே இருக்கிறது. அவரும் உயிரோடுதான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார். இதுபற்றி வாரப்பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பிரபாகரன் தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்த எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றியும் மறக்காமல் கேட்டனர். பிரபாகரன் இல்லை என்று கூறி சிங்கள அரசு அது தொடர்பாக ஏதோ ஒரு காட்சியை காட்டியது. ஆனால் பொட்டு அம்மான் இல்லை என்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட செய்யவில்லை. பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலான நபர்கள் கூறினார்கள். பிரபாகரனும், பொட்டு அம்மானையும் மரணத்தால் கூட பிரிக்க முடியாது. 2004-ல் நான் வன்னியில் பிரபாகரனை சந்தித்தபோது பொட்டு அம்மானை எனக்கு பிரபாகரன் அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவரும் எவ்வளவு நம்பிக்கையுடனும், நட்புறவுடனும் இருக்கிறார்கள் என்று அப்போது என்னால் அறிய முடிந்தது. பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார் என்று மக்கள் கூறிய கருத்தையே நானும் கூறுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக