எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 25 ஜூன், 2009

உயர் பொலிஸ் அதிகாரி தமது குடும்பத்தாரை படுகொலை செய்துள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2009, 05:22.04 AM GMT +05:30 ]
தெஹிவளைப் பிரதேசத்தில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை இவ்வாறு குறித்த காவல்துறை அதிகாரி படுகொலை செய்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தப் பாதகச் செயலை மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தத நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்றிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை தாமே மேற்கொண்டதாக குறித்த காவல்துறை அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், தமக்கு தாமே துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக