எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 17 ஜூன், 2009

இந்தியாச்செய்திகள்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பத்தி கொண்டா, துக்கலி ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் விவசாயிகள் சிறிய ரக கண்ணாடி கற்களை கண்டெடுத்தனர். அவை மிகவும், மிணு மிணுப்பாகவும் இருளில் வெளிச்சத்தை உமிழ்வதாகவும் இருந்தது.
இந்த கற்கள் பற்றி தகவல் அறிந்ததும் ஜியோ மைசூர் என்ற நிறுவனம் பத்திகொண்டா பகுதியில் ஆய்வு நடத்தியது. அப்போது அந்த கற்கள் வைரம் என்பது தெரிய வந்தது. மேலும் வயலில் நடத்திய ஆய்வில் தங்க உலோகம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனம் தங்க சுரங்கம் அமைக்க முடிவு செய்தது. வயல் மண்ணில் தங்கம்- வைரம் கலந்திருப்பதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் மண்ணை தோண்டி தங்கம்-வைரம் இருக்கிறதா? என்று தேடுதல் வேட்டையில் குதித்தனர். அப்போது ஒரு சிலருக்கு வைரக்கற்கள் கிடைத்தன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த விவசாயிகளிடம் இருந்து வைர வியாபாரிகள் குறைந்த விலைக்கு அதை வாங்க சென்றனர். இன்று காலையில் அங்கு மேலும் கூட்டம் திரண்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும்; கருணாநிதி பேட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக